ஏ மஞ்ச பையே!எங்கே சென்றாய் எமை விடுத்து!
ஏ மஞ்ச பையே!எங்கே சென்றாய் எமை விடுத்து! எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்த மஞ்சள் பையே எங்கே சென்றாய்! என் பாலபருவத்தில் மாசிமாதம் காரமடை தேர்த் திருவிழாவிற்கு சென்று வரும் என் பாட்டி வாங்கி வரும் அந்த கோவில் மிட்டாய்யையும், கடலை பொரியையும் சுமந்து வந்த மஞ்சப் பையே எங்கே போனாய்? திருமண வீட்டு நிகழ்விலிருந்து திரும்பும் போது அந்த சாத்துக்கொடியையும்,தேங்காயையும் தாம்பூலமாய் சுமந்து வந்த மஞ்சப் பையே! எங்கே போனாய்? திருமண காலங்களிலும் சரி திருவிழாக் காலத்திலும் சரி வலம் வந்த மஞ்சப் பையே எங்கே போனாய்? விழா காலங்களிலும் திருமண ஜவுளியிலும் சரி ஓசியில் ஓரிரு பைகள் கேட்டு எம் பெற்றோர்கள் கையில் தவழ்ந்து வந்த மஞ்சப் பையே! எங்கே போனாய்? கதற கதற உனை பயன் படுத்தி கசாப்பு கடைக்கும் உன்னை சுமந்து சென்றார்களே! எம் முன்னோர்கள்!அது மட்டுமா! கடைசியில் உன்னை பார்த்தது அடுப்படி கரித் துணிக்கல்லவா! இத்துணை சிறப்பு பெற்ற மஞ்சப் பையே! நீ திரும்பி வா! போதும் உன் கோபம்! மக்கள் நெகிழிக் காகிதம் மீது நேசம் கொண்டு அகழியில் கிடக்கும் முதலைகளாய் அல்லல் பட்டதும் போதும்! நீ வலம் வரும் காலத்தில் ...