"ஆக்சிஜன் இல்லாமல் ஐந்து நொடிகள்":-- * உங்களிடம் ஒரு சுவாரஸ்யமான கேள்வி கேட்கப் போகிறேன். * அதாவது ,(பிராணவாயு)ஆக்சிஜனை பூமிய...
"ஆக்சிஜன் இல்லாமல் ஐந்து நொடிகள்":--
*
உங்களிடம் ஒரு சுவாரஸ்யமான கேள்வி கேட்கப் போகிறேன்.
*
அதாவது ,(பிராணவாயு)ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்?
*
'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை '?--னு கேக்கறீங்களா...? காரணம் இருக்கு! அதைக் கடைசியா சொல்றேன்! இப்ப விடை சொல்லுங்க பாஸ்...!
*
"இதென்ன கேள்வி ?எல்லா உயிரினங்களும் அழிந்து போகும் "
என்கிறீர்களா...?
*
சரி...!நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்?
*
'அப்படி என்றால், ரொம்ப்ப் பயப்படத் தேவை இல்லை.என்ன! எல்லோரும் கூவத்தைக் கடந்து போறா மாதிரி, ஒரு ஐந்து நொடி, மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டால், முடிந்தது! பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை ' என்பது, உங்கள் பதிலாக இருக்குமேயானால்..,
*
இனி சொல்லப் போகும் அனைத்தும் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
*
கருப்பு வானம் :---
-------------------------
வானம் பகல் நேரத்தில் இவ்வளவு ஒளியுடன் பிரகாசமாக்க் காட்சி அளிப்பதற்குக் காரணம்,ஒளி சிதறல். அதாவது ,ஒளி... வளிமண்டல ஆக்சிஜன் மூலக் கூறு மற்றும் தூசு களில் பட்டு, மீண்டும், மீண்டும் எதிரொளிப்பது..
*
இப்போது ஆக்சிஜனை நீங்கள் நீக்கி விட்டதால், வானம் கருகரு --னு ,இருட்டா கருப்பா ஆயிடும்..
*
மேலும் இப்போது பார்ப்பதைப் போல, அனைத்து இடத்திலும் வெளிச்சமாக இல்லாமல், யாரோ LED பல்ப் போட்டாற்போல வெளிச்சம் ,குவிக்க பட்ட நிலையில் கிடைக்கும்.
*
(சும்மாவே பத்தரை மணிக்கு எந்திரிப்பவங்க இன்னும் விடியலை போல -- னு திரும்பத் தூங்கப் போக வேண்டியது தான்)
*
இடியும் கட்டடங்கள் :--
------------------------------------
நீங்கள் கண்ணால் பார்க்கக் கூடிய கான்க்ரீட்டால் ஆன எந்தக் கட்டடமும்...அது வீடோ பாலமோ... எல்லாமே மண்ணால் பண்ணி வைத்தது போல, பொல பொலவென உதிர்ந்து போகும்.
*
காரணம், கான்க்ரீட் கலவையில் முக்கிய பிணைப்பு ஆக்சிஜன் தான்.
*
(சும்மாவே நம்மூர்ல அரசியல் வாதிங்க கட்டற கட்டடம், பாலம் எல்லாம் அப்பப்போ ஆக்சிஜன் இல்லாத மாதிரி விழுந்து கொண்டுதான் இருக்கிறது)
*
ஆவியாகும் கடல் :---
--------------------------------
தண்ணீர் என்பது ஹைட்ரஜனும் ,ஆக்சிஜனும் கலந்த கலவை -- னு நமக்குத் தெரியும் ..!எனவே அதில் உள்ள ஆக்சிஜனை மட்டும் நீக்கி விட்டால், மீதி இருப்பது ஹைட்ரஜன் ....
*
அதாவது வாயு.
அதுவும் அது எப்படிப்பட்ட வாயு..? பறக்கும் பலூன் ஏன் பறக்குது? ஆம் !அதேதான்!
*
அதுக்குள்ளே இருப்பது மிகவும் லேசான தனிமம் ஆகிய ஹைட்ரஜன் .எனவே மொத்தக் கடலும் ..ஏரி..குளம் எல்லா நீர் நிலையும், ஆவி யாகி வானத்துக்குப் போய்விடும் .
*
(மேட்டர் தெரியாமல் மெரினா போனவன்,கடலைக் காணாமல் கம்ப்ளைண்ட் கொடுக்க வேண்டியது இருக்கும்)
*
நிற்கமுடியாத நிலம் :---
-----------------------------------
பூமியின் மேலடுக்கின் கட்டுமானத்தில் ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிப்பதால், அது முழுவதும் கட்டிப்பட்டு நிற்கும் தன்மை போய்.. புதை மணலில் நிற்பதை போல உள் வாங்கி கொள்ளும். நிற்க நிலம் கிடைக்காது..
*
(நிற்க நேரம் இல்லைனா சமாளிக்கலாம்! நிற்க நிலமே இல்லைனா என்ன பண்றது?)
*
சுடும் சூரியன்:---
---------------------------
குறிப்பா சூரியன் சுட்டெரிக்கும்.
இதெனப்பா ஆச்சர்யம்!அது தினம் சுட்டுக்கிட்டுத் தானே இருக்கு என்று நினைக்காதீர்கள்!
*
நான் சொல்வது அடுப்பில் வடை சுடுவதை போல.....
சூரியனில் உள்ள புறஊதா வை, ஓசோன் (o 3 ) தான் வடி கட்டி அனுப்புகிறது.
*
அதில் உள்ள ஆக்சிஜன் நீக்கப் பட்டால், அதன் பின் சூரிய ஒளியில் நிற்கும் யாவரும், "தந்தூரி சிக்கன்" தான்.
*
உள் காது கோவிந்தா :----
---------------------------------------
நம்ம காதுக் குள்ள ஒரு நிலை நிறுத்தும் அமைப்பு ஒன்னு இருக்கு. அதன் வேலை நம்மை சுற்றி அழுத்த மாறுபாடு ஏற்பட்டால், அதனால் நாம் பாதிக்கப் படாமல் இருக்க, நம்மை சமன் நிலையில் வைப்பதற்காக அழுத்த மாறுபாட்டைப் பராமரிப்பது.
*
ஆனால், ஆக்சிஜன் நீக்கப் பட்டதால், வளிமண்டல காற்று அளவு 21 சதம் திடீரெனக் குறைந்து போய்.. அழுத்தம் கணிசமான அளவில் குறைந்து விடுவதால், மிகப் பெரிய அழுத்த மாறுபாட்டை, சமாளிக்க முடியாமல் அனைவரின் உள் காதுகளும் வெடித்துச் சிதறும்...!
*
ஹலோ !நான் சொல்றது கேக்குதா...?ஹலோ....! ஹலோ...!!
*
இயங்காத இன்ஜின்கள்:---
--------------------------------------------
ஆட்டோ தொடங்கி, ஆட்டோமேட்டிக் விமானம் வரை.,
*
ரோடு ரோலர் இன்ஜின் முதல், ராக்கெட் இன்ஜின் வரை, எந்த எரிபொருளில் இயங்கும் இன்ஜினானாலும், அதில் எரிக்க படுவது ஆக்சிஜன் தான் என்பதால்,
*
நாம் திட்டமிட்ட அந்த ஐந்து வினாடிகளில் பறக்கும் விமானம் .. ஓடும் கார் பைக் எதுவானாலும், அங்கங்கே இயங்காமல் நிற்கும் .
*
(தலைக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்தால், கொஞ்சம் தள்ளி நின்று கொள்வது, தலைக்கு நல்லது)
*
ஒட்டிக்கொள்ளும் உலோகங்கள் :-----
---------------------------------
குளிர் வெல்டிங் முறை பற்றி உங்களுக்கு தெரியுமா?
*
அதில் இரண்டு உலோகங்களுக்கு இடையில் உள்ள காற்றை நீக்கி, வெற்றிடம் உண்டு பண்ணுவார்கள்!
*
அப்படிச் செய்தால், அந்த உலோகம் வெல்ட் பண்னாமலேயே, வெல்ட் பண்ணது போல, ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும்.
*
சாதாரணமாக உலோகங்கள் அப்படி ஒட்டிக் கொள்ளாமல் இருக்கக் காரணம், அவைகளின் மேலே, ஆக்சிடைசின் பூச்சு இயற்கையாகவே ஒரு மேல் அடுக்கு போல ,பரவி இருப்பது தான் .
*
அதில் மேல் சொன்ன ஆக்சிஜன் நீக்கம் நடந்தால், உலோகங்கள் தானாகவே ஒன்றோடு ஒன்று வெல்ட் பண்ணிக்கொள்ளும்.
*
இப்ப சொல்லுங்க...!
பூமியில் ஐந்து நொடி...! ஐந்தே ஐந்து நொடி! பிராணவாயு இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா..?
நிச்சயமாக முடியாது அல்லவா...?
*
இதையெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால்.....
அப்படிப்பட்ட பிராணவாயுவை 100 தொழிற்சாலை உற்பத்தி பண்ண முடியாத ஆக்சிஜனை, ஒரு மரம் உற்பத்தி பண்ண முடியும் ..!
*
எனவே,
*
#மரம்_வளர்ப்போம் !ஆக்சிஜன் பெருக்குவோம்!!
*
உங்களிடம் ஒரு சுவாரஸ்யமான கேள்வி கேட்கப் போகிறேன்.
*
அதாவது ,(பிராணவாயு)ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்?
*
'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை '?--னு கேக்கறீங்களா...? காரணம் இருக்கு! அதைக் கடைசியா சொல்றேன்! இப்ப விடை சொல்லுங்க பாஸ்...!
*
"இதென்ன கேள்வி ?எல்லா உயிரினங்களும் அழிந்து போகும் "
என்கிறீர்களா...?
*
சரி...!நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்?
*
'அப்படி என்றால், ரொம்ப்ப் பயப்படத் தேவை இல்லை.என்ன! எல்லோரும் கூவத்தைக் கடந்து போறா மாதிரி, ஒரு ஐந்து நொடி, மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டால், முடிந்தது! பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை ' என்பது, உங்கள் பதிலாக இருக்குமேயானால்..,
*
இனி சொல்லப் போகும் அனைத்தும் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
*
கருப்பு வானம் :---
-------------------------
வானம் பகல் நேரத்தில் இவ்வளவு ஒளியுடன் பிரகாசமாக்க் காட்சி அளிப்பதற்குக் காரணம்,ஒளி சிதறல். அதாவது ,ஒளி... வளிமண்டல ஆக்சிஜன் மூலக் கூறு மற்றும் தூசு களில் பட்டு, மீண்டும், மீண்டும் எதிரொளிப்பது..
*
இப்போது ஆக்சிஜனை நீங்கள் நீக்கி விட்டதால், வானம் கருகரு --னு ,இருட்டா கருப்பா ஆயிடும்..
*
மேலும் இப்போது பார்ப்பதைப் போல, அனைத்து இடத்திலும் வெளிச்சமாக இல்லாமல், யாரோ LED பல்ப் போட்டாற்போல வெளிச்சம் ,குவிக்க பட்ட நிலையில் கிடைக்கும்.
*
(சும்மாவே பத்தரை மணிக்கு எந்திரிப்பவங்க இன்னும் விடியலை போல -- னு திரும்பத் தூங்கப் போக வேண்டியது தான்)
*
இடியும் கட்டடங்கள் :--
------------------------------------
நீங்கள் கண்ணால் பார்க்கக் கூடிய கான்க்ரீட்டால் ஆன எந்தக் கட்டடமும்...அது வீடோ பாலமோ... எல்லாமே மண்ணால் பண்ணி வைத்தது போல, பொல பொலவென உதிர்ந்து போகும்.
*
காரணம், கான்க்ரீட் கலவையில் முக்கிய பிணைப்பு ஆக்சிஜன் தான்.
*
(சும்மாவே நம்மூர்ல அரசியல் வாதிங்க கட்டற கட்டடம், பாலம் எல்லாம் அப்பப்போ ஆக்சிஜன் இல்லாத மாதிரி விழுந்து கொண்டுதான் இருக்கிறது)
*
ஆவியாகும் கடல் :---
--------------------------------
தண்ணீர் என்பது ஹைட்ரஜனும் ,ஆக்சிஜனும் கலந்த கலவை -- னு நமக்குத் தெரியும் ..!எனவே அதில் உள்ள ஆக்சிஜனை மட்டும் நீக்கி விட்டால், மீதி இருப்பது ஹைட்ரஜன் ....
*
அதாவது வாயு.
அதுவும் அது எப்படிப்பட்ட வாயு..? பறக்கும் பலூன் ஏன் பறக்குது? ஆம் !அதேதான்!
*
அதுக்குள்ளே இருப்பது மிகவும் லேசான தனிமம் ஆகிய ஹைட்ரஜன் .எனவே மொத்தக் கடலும் ..ஏரி..குளம் எல்லா நீர் நிலையும், ஆவி யாகி வானத்துக்குப் போய்விடும் .
*
(மேட்டர் தெரியாமல் மெரினா போனவன்,கடலைக் காணாமல் கம்ப்ளைண்ட் கொடுக்க வேண்டியது இருக்கும்)
*
நிற்கமுடியாத நிலம் :---
-----------------------------------
பூமியின் மேலடுக்கின் கட்டுமானத்தில் ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிப்பதால், அது முழுவதும் கட்டிப்பட்டு நிற்கும் தன்மை போய்.. புதை மணலில் நிற்பதை போல உள் வாங்கி கொள்ளும். நிற்க நிலம் கிடைக்காது..
*
(நிற்க நேரம் இல்லைனா சமாளிக்கலாம்! நிற்க நிலமே இல்லைனா என்ன பண்றது?)
*
சுடும் சூரியன்:---
---------------------------
குறிப்பா சூரியன் சுட்டெரிக்கும்.
இதெனப்பா ஆச்சர்யம்!அது தினம் சுட்டுக்கிட்டுத் தானே இருக்கு என்று நினைக்காதீர்கள்!
*
நான் சொல்வது அடுப்பில் வடை சுடுவதை போல.....
சூரியனில் உள்ள புறஊதா வை, ஓசோன் (o 3 ) தான் வடி கட்டி அனுப்புகிறது.
*
அதில் உள்ள ஆக்சிஜன் நீக்கப் பட்டால், அதன் பின் சூரிய ஒளியில் நிற்கும் யாவரும், "தந்தூரி சிக்கன்" தான்.
*
உள் காது கோவிந்தா :----
---------------------------------------
நம்ம காதுக் குள்ள ஒரு நிலை நிறுத்தும் அமைப்பு ஒன்னு இருக்கு. அதன் வேலை நம்மை சுற்றி அழுத்த மாறுபாடு ஏற்பட்டால், அதனால் நாம் பாதிக்கப் படாமல் இருக்க, நம்மை சமன் நிலையில் வைப்பதற்காக அழுத்த மாறுபாட்டைப் பராமரிப்பது.
*
ஆனால், ஆக்சிஜன் நீக்கப் பட்டதால், வளிமண்டல காற்று அளவு 21 சதம் திடீரெனக் குறைந்து போய்.. அழுத்தம் கணிசமான அளவில் குறைந்து விடுவதால், மிகப் பெரிய அழுத்த மாறுபாட்டை, சமாளிக்க முடியாமல் அனைவரின் உள் காதுகளும் வெடித்துச் சிதறும்...!
*
ஹலோ !நான் சொல்றது கேக்குதா...?ஹலோ....! ஹலோ...!!
*
இயங்காத இன்ஜின்கள்:---
--------------------------------------------
ஆட்டோ தொடங்கி, ஆட்டோமேட்டிக் விமானம் வரை.,
*
ரோடு ரோலர் இன்ஜின் முதல், ராக்கெட் இன்ஜின் வரை, எந்த எரிபொருளில் இயங்கும் இன்ஜினானாலும், அதில் எரிக்க படுவது ஆக்சிஜன் தான் என்பதால்,
*
நாம் திட்டமிட்ட அந்த ஐந்து வினாடிகளில் பறக்கும் விமானம் .. ஓடும் கார் பைக் எதுவானாலும், அங்கங்கே இயங்காமல் நிற்கும் .
*
(தலைக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்தால், கொஞ்சம் தள்ளி நின்று கொள்வது, தலைக்கு நல்லது)
*
ஒட்டிக்கொள்ளும் உலோகங்கள் :-----
---------------------------------
குளிர் வெல்டிங் முறை பற்றி உங்களுக்கு தெரியுமா?
*
அதில் இரண்டு உலோகங்களுக்கு இடையில் உள்ள காற்றை நீக்கி, வெற்றிடம் உண்டு பண்ணுவார்கள்!
*
அப்படிச் செய்தால், அந்த உலோகம் வெல்ட் பண்னாமலேயே, வெல்ட் பண்ணது போல, ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும்.
*
சாதாரணமாக உலோகங்கள் அப்படி ஒட்டிக் கொள்ளாமல் இருக்கக் காரணம், அவைகளின் மேலே, ஆக்சிடைசின் பூச்சு இயற்கையாகவே ஒரு மேல் அடுக்கு போல ,பரவி இருப்பது தான் .
*
அதில் மேல் சொன்ன ஆக்சிஜன் நீக்கம் நடந்தால், உலோகங்கள் தானாகவே ஒன்றோடு ஒன்று வெல்ட் பண்ணிக்கொள்ளும்.
*
இப்ப சொல்லுங்க...!
பூமியில் ஐந்து நொடி...! ஐந்தே ஐந்து நொடி! பிராணவாயு இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா..?
நிச்சயமாக முடியாது அல்லவா...?
*
இதையெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால்.....
அப்படிப்பட்ட பிராணவாயுவை 100 தொழிற்சாலை உற்பத்தி பண்ண முடியாத ஆக்சிஜனை, ஒரு மரம் உற்பத்தி பண்ண முடியும் ..!
*
எனவே,
*
#மரம்_வளர்ப்போம் !ஆக்சிஜன் பெருக்குவோம்!!
COMMENTS