ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி, தனக்கு வயதாகி விட்டதால், தன் நிறுவனத்தின் பொறுப்பை

SHARE:

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின்  முதலாளி, தனக்கு வயதாகி விட்டதால், தன் நிறுவனத்தின் பொறுப்பை, தன்னிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக...

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின்  முதலாளி, தனக்கு வயதாகி விட்டதால், தன் நிறுவனத்தின் பொறுப்பை, தன்னிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளையிட்டார்.

"உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ, அவர் தான் அடுத்த மேலாளர்..

என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன. இதை ஆளுக்கொன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரமிட்டு, தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யாருடைய செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும்.." என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கிச் சென்றனர், அந்த கம்பெனியில் வேலை செய்யும் ராமு உட்பட. தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டி, உரம், தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது. நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் ராமுவின் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதமானது. செடி வளரவில்லை.. நாட்கள் உருண்டோடி, ஆறு மாதங்களானது. அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. 'நான் விதையை வீணாக்கிவிட்டேனா..' என்று புலம்பினான். ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை.

ஒரு வருடம் முடிந்து, எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். ராமு  தன் மனைவியிடம் காலித் தொட்டியை நான் எடுத்துக் கொண்டு போகமாட்டேனென்று கூற, அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி, நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்று கூறி அவனை தொட்டியுடன் அனுப்பி வைத்தாள்.

ராமுவும் காலித் தொட்டியுடன் அலுவலகம் சென்றான். அங்கு எல்லார் தொட்டியிலும் விதவிதமான செடிகள், ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியைப் பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார். அனைவரது செடிகளையும் பார்வையிட்டார்.

"அருமை..!! எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்துள்ளீர்கள்..! உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏற்றுக்கொள்ள போகிறீர்கள்..!" என்று கூறியவர், கடைசி வரிசையில் நின்றிருந்த ராமுவை அருகே வருமாறு அழைத்தார்.

ராமு  தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான். உன் செடி எங்கே? என்று கேட்க, ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.

"ராமுவைத் தவிர அனைவரும் அமருங்கள்..!" என்றார். பிறகு ராமுவின் தோளில் கையை போட்டுகொண்டு "நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான்.." என்றார். ராமுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனான்.

"சென்ற வருடம் நான் உங்களூக்கெல்லாம் ஆளுக்கொரு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா..!! அவையனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்துக் கொண்டு வந்தீர்கள். ராமு  மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான்.. ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன்.." என்று அவர் கூறியவுடன் அனைவரும் வாயடைத்துப் போயினர்.

நாம் #சொல்லும்_சொல் | #நாம்_பயணிக்கும் #பாதை_நேர்மையாக இருந்தால் #வெற்றிகள்_நம்மைத் தேடி வரும்...!

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் #ஒரு_போராட்டம் தான்..

உண்மையும், நேர்மையும் #தர்மத்தை பாதுகாக்கும்.. நேர்மை ஒரு போதும் #வீண்போகாது. நேர்மையை விதையுங்கள்.. பதவியும், பணமும் தேடிவரும்...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

COMMENTS

பெயர்

உலகின் முக்கிய தினங்கள்,1,Blogger Template,9,FlatBellyTips WeightLossHacks,1,Google Analytics,1,Hair Long Tamil,1,Health,20,Maha Shivaratri 2025 Kovai Isa Maiya 2025,1,Money,13,News,4,Personal loan,1,Tiruppur,2,Tourist place,3,Tourist plases,2,
ltr
item
Kavithai in malay: ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி, தனக்கு வயதாகி விட்டதால், தன் நிறுவனத்தின் பொறுப்பை
ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி, தனக்கு வயதாகி விட்டதால், தன் நிறுவனத்தின் பொறுப்பை
Kavithai in malay
https://dinesh2222014.blogspot.com/2019/06/blog-post.html
https://dinesh2222014.blogspot.com/
https://dinesh2222014.blogspot.com/
https://dinesh2222014.blogspot.com/2019/06/blog-post.html
true
2375748365847085435
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content