முகப்பரு போக்க இயற்கை வழிகள் முகப்பருவுக்கு நிவாரணம்
முகப்பரு போக்க இயற்கை வழிகள்
முகப்பரு போக்க இயற்கை வழிகள்
முகப்பருவுக்கு நிவாரணம்முதலில் முகத்தில் இருக்கின்ற செபாஷியஸ் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சீபம் என்னும் எண்ணெய்க் கசிவு முகத்தோலின் மீது படிவதால் , பலவிதமான ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு அவை முகப்பருவாக மாறுகிறது .நவநாகரீக உணவான ட்ரை புட்ஸ்களை தவிர்க்க வேண்டும் .முகப்பரு இருந்தால் உடனே கிள்ளி எறிந்து விட விரல்கள் முயற்சிக்கும் .கிள்ளினால் பெரும் விளைவுகள் உண்டாகும் .முதலில் புதினா இலைகளை அரைத்து தடவுங்கள் .வேப்பிலை பொடியுடன் மஞ்சள் தூள் . சந்தனம் சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்களில் மீது பூசி வரலாம் .வேப்பிலை பொடி புதினா பொடி துளசிப் பொடி இவைகளை தலா 10 கிராம் அளவு எடுத்துக் கொண்டு மிதமான சுடுதண்ணீரில் மேற்கொண்ட பொடிகளை சந்தனம் போல் குழைத்து முகத்தில் தடவவும் .கண்களுக்கு அடியில் கண்டிப்பாக தடவக் கூடாது .15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடவும் .தொடர்ந்து 4 அல்லது 5 நாட்கள் செய்தால் பருக்கள் மறையும் .அருகம்புல் பொடி குப்பை மேனி இலைப்பொடி இரண்டையும் சம அளவு பருக்களின் மேல் மருந்து போல் இரவில் போட்டு காலை அலம்புங்கள் .தொடர்ந்து 2.3 நாட்கள் செய்தால் பரு மறையும்அருகம்புல் சாற்றுடன் சிறிதளவு பன்னீர் பப்பாளிப் பழம் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி .உலந்தவுடன் கழுவி வர வெயிலால் ஏற்பட்ட கருமை அகன்று முகம் பள பளப்பாகும் .மேற்படி கூறிய கலவையை அரைத்து வடிகட்டி பருகிவர சிறுநீரக நோய்கள் குணமாவதுடன் உடலும் முகமும் அழகு பெரும் .ஊமத்தம் பூவை கசக்கி பருக்களின் மீது பற்று போடலாம் .எலுமிச்சம் இலையை மட்டும் அரைத்து பூசலாம் .ஜாதிக்காய் , சந்தனம் , மிளகு இவை மூன்றையும் சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசினால் பருத்தொல்லை போகும் .சிலர் வெள்ளைப் பூண்டை மட்டும் அரைத்து பூசுவார்கள் .தேன் மெழுகையும் சர்க்கரையும் சேர்த்து குழைத்து அதை முகப்பருக்கள் மீது இட்டுவர விரைவில் அவை மறைந்து விடும் முகம் பொழிவு பெறும் .வாரம் ஒன்றிரண்டு நாட்கள் அகத்திக்கீரையை உணவில் சேர்த்து வந்தாலும் , தினசரி ஒரு துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டாலும் முகம் வசீகரம் அடைந்து பரு தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் .துளசி 4 இலை வேப்பந்தளிர் கடலை மாவு ஒரு தேக் கரண்டி எலுமிச்சைச் சாறு அரை தேக்கரண்டி கலந்து அரைத்துக் கொள்ளுங்கள் .இந்த விழுதை பருக்களின் மீது போட்டு 5 நிமிடம் கழித்து மிதமான சுடு தண்ணீரில் கழுவுங்கள் .தோல் மிருதுவாகி பருக்கள் மறையும் .நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவலாம் .
COMMENTS